Friday, November 19, 2010

ஏன் ?????????????????

நிலவை பிரிந்து வானம் விழவில்லை;


நதியை பிரிந்து கரையும் அழவில்லை;


உன்னை பிரிந்த நான் மட்டும் ஏன்?



வண்டுக்கு மலரில் இல்லாத மோகம்;


வேருக்கு நீரில் இல்லாத தாகம்;


எனக்கு மட்டும் உன்னில் ஏன்?





அனலாய் சுட்ட உன் வார்த்தைகளை


ஏன் இதயம்


சிதறாமல் சேகரிப்பது ஏன்?



தணலாய் கொதிக்கும்


உன் கோபத்தை


எட்டியிருந்து ரசிப்பதும் ஏன்?





விட்டுக்கொடுக்கவும் முடியாமல்


விட்டுப்போகவும் இயலாமல் - நெஞ்சம்


தட்டுத் தடுமாறி தவிப்பது ஏன்?



எட்டிப்பிடிக்கவும் முடியாத உன்னை


கட்டிப்பிடிக்க நினைத்து - நானும்


பெட்டிப் பாம்பாய் அடங்குவது ஏன்?




சுக்கு நூறாய் உடைந்த பின்னும்


சட்டென்று ஒட்டிக்கொண்டு


உனக்காய் உருகும் உயிரும் ஏன்?



வேண்டும் என்று இதயம் முனுமுனுக்க


வேண்டாம் என்று போலியாய்


அடிக்கடி உளறும் உதடுகள் ஏன்?

Tuesday, November 9, 2010

ME and MY BOSS .......?????????????

When I Take a long time to finish,


  I am slow,


When my boss takes a long time,


he is thorough.




When I don't do it,


I am lazy,


When my boss does not do it,


he is busy,



When I do something without being told,


I am trying to be smart,


When my boss does the same,


he takes the initiative,




When I please my boss,


I am apple polishing,


When my boss pleases his boss,


He is cooperating,


When I make a mistake,


I' am an idiot.


When my boss makes a mistake,


He's only human.





When I am out of the office,


I am wondering around.


When my boss is out of the office,


He's on business.







When I am on a day off sick,


I am always sick.


When my boss is a day off sick,


He must be very ill.





When I apply for leave,


I must be going for an interview .


When my boss applies for leave,


it's because he's overworked







When I do good,


my boss never remembers,


When I do wrong,


he never forgets




What to do?????????????





What to do?????????????




Thursday, August 5, 2010

ஆண்கள் எல்லாம் சிங்கம் மாதிரி...

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை தமிழ் படுத்தி தந்திருக்கிறேன். கண்டிப்பாக சிரிக்க மட்டும்...








ஆண்களே!!! நீங்கள் ஒரு சிங்கம் மாதிரி..................................


நீங்கள் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவர்கள்


இந்த உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்தவர்கள்....


பார்வையாலேயே மிரட்டும் வித்தை அறிந்தவர்கள்....





எதையும் செய்யும் சுதந்திரம் மிக்கவர்கள்....





யாராக இருந்தாலும் உங்களுக்கு கீழேதான்...


அனைவரும் விரும்பும் பாசக்கார மனிதர்....





எப்போதும் ஜென்டில்மேன் நீங்கள்...





நினைத்ததை முடிக்கும் வல்லமை படைத்தவர்....



உங்களுக்கு கோபம் வந்தால் நாடு தாங்காது...





மொத்தத்தில் உங்களை கண்டால் நாடே அதிரும்...



என்னதான் நாட்டையே நடுங்க வைக்கும் சிங்கமாக இருந்தாலும்,

:

:

:

:

:

:

:

:

:



உங்கள் வீட்டை பொறுத்தவரை நீங்கள் ஒரு காமெடி பீஸ்தான். ஆண்டவன் உங்களுக்கும் ஒரு ஆப்பு வைத்திருக்கிறான்.
 

நன்றி பாலாவின் பக்கங்கள்

Thursday, July 8, 2010

காதல்., காதல்., காதல்...!!


வணக்கம் சொல்லி



சந்திக்கையிலும்..,






வருகிறேன் என


விடைபெறுகையிலும்..,






இயல்பாய் பேசி


விலகுகிறாய் நீ..






இயக்கமே தடைப்பட்டு


நிற்கிறேன் நான்..

.....................................................................................................

" நீதான் " என்று சொல்ல



உனக்கு தைரியம் இல்லை..






" நானா..? " என்று கேட்க


எனக்கும் தெம்பில்லை..






உன் கவிதைப் பெண் யாரடா..??!!






------------------------------------



இருபது நிமிடம்


தாமதமாய் வந்த


என்னை


திட்டுகிறாய் நீ..,






இருபத்தியொரு வருடம்


தாமதமாய் வந்த


உன்னை


எதுவுமே சொல்லாமல்


அனுசரித்துக் கொள்கிறது


என் காதல்..!



------------------------------------






நீ கேட்டுக் கொண்டதால்


இந்த கவிதையைக் கூட


அழகாகவே எழுத


ஆசைப்படுகிறேன்..






ஆனாலும்


எழுதப்போவதில்லை..






காதலை விடவும்


அழகான ஒன்று


நமக்கெதற்கு..??!!



------------------------------------






பிரிந்து போன நாளில்


எல்லோரும் கொடுத்தார்கள்


நினைவு பரிசு..






நீ மட்டும் கொடுத்தாய்


உன் நினைவுகளை பரிசாக..






------------------------------------



விக்கலில் நான்


தண்ணீர் குடிப்பதில்லை..,


நினைப்பது நீயாக


இருந்தால் நீடிக்கட்டுமே..!!






------------------------------------
( படித்ததில் பிடித்தது...)



பின் குறிப்பு : உங்களுக்கு பிடிச்ச


காதல் கவிதைகளையும்

Comment Section-ல எழுதலாமே...!!

Friday, May 21, 2010

வரைந்த ஓவியமாக நீ........வரையப்பட்ட காகிதமாய் நான்......

காதல் கவுஜைகள்




வரைந்த ஓவியமாக நீ

வரையப்பட்ட காகிதமாய் நான்

ஏன் வரைந்தோம் என உன் அப்பா...





காகிதத்தில் உன்பெயரை

எழுதுகிறேன்...

முடியவில்லை

கையில் எழுதுகிறேன்

முடியவில்லை

சுவரில் எழுதுகிறேன்

முடியவில்லை

ஒன்று மட்டும் புரிந்தது

பேனாவில் மை இல்லையென்று...





வானத்தில் நிலாவை

ரசித்தவளிடம்

நிலாவை ஏன் வானத்தில்

பார்க்கிறாய்

கண்ணாடியைப்பார் என்றேன்...

வெட்கத்தில் ஒடுகிறாள்

பாவிபுள்ள எதைச்சொன்னாலும் நம்புது...





இனிமேல் குடிக்கமாட்டேன்

என சத்தியம் கேட்டாய்

பதிலுக்கு இனிமேல் குளிப்பேன்

என சத்தியம் தருவாயா?





ஒரு கவிதை எழுது என்றாள்

அவள் பெயரை எழுதினேன்

வெட்கப்படுகிறாள்

அவளுக்குத் தெரியாது நான் ஒரு

மொக்கை கவிஞன் என்று...


Wednesday, April 14, 2010

கணினியில் வைரஸ்

ஓரு வரி கருத்து:மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம், ஆனால் நீண்ட நாள் அங்கேயே தங்க முடியாது.




கணினி உபயோகிப்பவர்களுக்கு வைரஸ் எனும் பெயர் கேட்டால் கொஞ்சம் அலர்ஜியாகத்தான் இருக்கும் அதிலும் புதியவர்களுக்கு கணினியில் ஏதாவது தகராறு என்றால் உடனே அவர்கள் சர்வீஸ் செய்யத்தான் நினைப்பார்கள் பார்மட் செய்யாமல் வைரஸ் நீக்கினாலும் அவர்களுக்கு அந்த பயம் விலகாது சரி இந்த வைரஸ் எப்படித்தான் நம் கணினியின் உள்ளே நுழைகிறது அந்த நுழைவாயிலை கொஞ்சம் அடைத்தால் இந்த பிரச்சினைக்கு கொஞ்சம் தீர்வு கிடைக்கும்.



வைரஸ் இணைய வழியிலும் மற்றும் பென் டிரைவிலும்,பிளாப்பி வழியிலும் தான் ஒரு கணினிக்குள்ளாக வைரஸ் வருகிறது அதிலும் இப்போதெல்லாம் பிளாப்பி என்பது இல்லாமல் போய்விட்டது அது ஏன் தகவல் பரிமாற்றத்துக்காக நாம் பயன்படுத்தும் சிடியின் வழியாக வைரஸ் வருவதில்லை ஏனென்றால் அது எழுதுவதற்கு அனுமதிப்பதில்லை ஆனால் பென் டிரைவ் அப்படியில்லை எத்தனை முறை வேண்டுமானாலும் அழித்து பதிந்து கொள்ளலாம் இந்த இடம் தான் வைரஸ்க்கு துணை செல்கிறது



இப்படி பென் டிரைவில் வரும் வைரஸ் தடுக்க சின்ன வழிமுறையை பின்பற்றலாம் இது சின்ன வழிமுறை ஆனாலும் இதனால் கணினிக்கு அதிக பாதுகாப்பு நிச்சியம், உங்கள் பென் டிரைவில் ஒரு புதிய போல்டர் உருவாக்கி அதற்கு பெயர் autorun.inf என கொடுத்து படத்தில் காண்பித்துள்ளது போல Read Only , Hidden இரண்டையும் தேர்வு செய்து ஓக்கே கொடுத்து விடவும் இனி இந்த போல்டர் உங்கள் பென் டிரைவில் இருந்து மறைந்து விடும்
















எதற்காக இந்த போல்டரை உருவாக்கினோம் பெரும்பான்மையான வைரஸ்கள் இந்த Autorun.inf வழியாகதான் வருகிறது அப்படி வரும் வைரஸ்கள் நமது பென் டிரைவில் ஏற்கனவே ஒரு autorun.inf இருப்பதாலும் அது Read Only , Hidden ஆக இருப்பதாலும் அதனால் இந்த பெயரில் autorun.inf உருவாக்கி உள்ளே வரமுடியாது.



ஒரு autorun.inf உருவாக்கி விட்டால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா? நீங்கள் உபயோகி்க்கும் பென் டிரைவ் என்றால் அதில் பாதுக்கப்பு ஏற்படுத்தியிருப்பீர்கள் வேறு ஒரு நண்பரின் பென் டிரைவ் தங்கள் கணினியில் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் அப்பொழுது என்ன செய்வீர்கள் இங்கும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம்



கணினியில் பென் டிரைவ் இனைக்கும் முன்பு ஷிப்ட் கீயை அழுத்தி பிடித்துக்கொள்ளவும் இவ்வாறு செய்வதால் ஒரு வேளை அந்த பென் டிரைவில் வைரஸ் இருந்தால் அது autorun வழியாக தானியங்கியாக திறக்க விடாது இனி கீழே டாஸ்க்பாரில் வலது மூலையில் பென் டிரைவ் கணினியில் இணைந்ததற்கு அறிகுறியாக பச்சை நிற ஆரோ வந்திருக்கும் இனி Windows Key + E உபயோகித்து திறக்கும் விண்டோவில் பென் டிரைவ் தேர்ந்தெடுத்து இருமுறை கிளிக்கி திறக்காமல் வலது கிளிக் வழியாக open என்பதை தேர்ந்தெடுக்கவும் வேண்டுமானால் திறக்கும் முன்பே உங்கள் வைரஸ் காப்பான் கொண்டு சோதித்து விடுங்கள்.



ஒரு வேளை வைரஸ் இருந்தால்

1)Start- 2)Run Type 3) Type cmd



டிரைவின் பெயர் 4) G: (உங்கள் டிரைவின் எழுத்தை பார்த்துக்கொள்ளவும்)



அடுத்தபடியாக 5) ATTRIB -H -R -S AUTORUN.INF



மீண்டும் 6) EDIT AUTORUN.INF



இனி புதிதாக ஒரு ஊதா நிற விண்டோ திறக்கும் அதில் 7)File என்பதில் கிளிக்கி 8)Save as கொடுக்கவும் பின்னர் 9) Exit என கொடுக்கவும்(வெளியேறவும்)



மீண்டும் 10)Start- 11)Run Type 12) Type cmd



13) ATTRIB +H +R +S AUTORUN.INF



அடுத்து 14) EXIT

அவ்வளவுதான் இனி பென் டிரைவ் எடுத்து மீண்டும் கணினியில் இணைத்துக்கொள்ளுங்கள் இப்போது சோதித்து பாருங்கள் வைரஸ் இருக்காது.



உங்கள் வைரஸ் கொல்லி எந்தளவிற்க்கு சிறந்தது என சோதித்து பார்க்க கீழே இருக்கும் கோடிங்கை காப்பி செய்து நோட்பேட் திறந்து பேஸ்ட் செய்து சேமித்து பாருங்கள் உங்கள் ஆன்டிவைரஸ் மென்பொருள் சிறப்பாக செயல்பட்டால் இதை சேமிக்க விடாது அப்படி சேமிக்க அனுமதித்தால் ஆண்டிவைரஸ் மென்பொருளை மாற்றிவிட்டு வேறு நல்ல மென்பொருளை நிறுவுங்கள்.

Tuesday, April 13, 2010

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்

Laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு சில சிறந்த வழிகள்



அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம்.




இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம்.



குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும்



Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் இணையத்தில் இலவசமாகவும் கிடைக்கின்றன.



hard drive இல் இருக்கும் தேவையற்ற games, music, pictures களை அளித்து விடுங்கள். இவை hard drive ஐ அடைத்துக்கொண்டு மெதுவாக இயங்கச்செய்கின்றன. உங்கள் hard drive, நிரம்ப்பிப்போய் இருந்தால் அது RAM ஐயும் processing ஐயும் பாதித்து அடிக்கடி பழுதுகள ஏற்பட வாய்ப்புக்களை ஏற்படுத்தும்.



சிறந்த anti-virus program ஐ பாவியுங்கள். வாரத்திற்கு ஒருமுறையேனும் உங்கள் laptop ஐ முழுமையாக் scan பண்ணுங்கள்.பெரும்பாலான anti-virus program களில் இதை தன்னிச்சையாக செய்வதற்கு வசதிகள் உண்டு.



recycle bin ஐயும் அடிக்கடி வெறுமையாக்குங்கள். தேவையற்றவறை bin இல் வைத்திருப்பதால் பலன் ஏதும் ஏற்படப்போவதில்லை.



temporary Internet Fileகளை அழியுங்கள். நீங்கள் ஒவ்வொருமுறையும் இணையப்பக்கத்திற்கு செல்லும்போதும் temporary Internet Fileகள் சேமிக்கப்படுகின்றன. நீங்கள் எந்ந்தவொரு browser ஐ பயன்படுத்தினாலும் அதன் cache ஐ clear செய்ய மறந்து விடாதீர்கள்.



laptop ஒவ்வொருமுறையும் on செய்யப்படும்போது தாமாகவே இயங்கும் startup programகளை குறையுங்கள். இவை எல்லாம் desktop தெரியாவிட்டாலும் பின்னணியில் இயங்கிக்கொண்டு இருப்பதால் RAM ஐ பயன்படுத்திக்கொண்டிருக்கும். எப்படி "msconfig" செய்வது என்று அறிந்து manualஆக தேவையற்றவற்றை தாமாக இயங்குவதை தடைசெய்யுங்கள்.



laptopஐ மென்மையான தளங்களில் வைப்பதை தவிருங்கள். மெத்தை சோபா போன்றவை உங்கள் laptop இனுள் காற்று உட்புகுவதையும் வெளிவருவதையும் தடைசெய்யும். இதன்போது processor சூடாகுவதால் crashe ஆகும் வாய்ப்புகளும் உதிரிப்பாகங்கள் பழுதாகும் வாய்ப்புகளும் அதிகம்.



தேவையற்ற programகளை Uninstall செய்யுங்கள். Uninstall செய்வதற்கு எப்போதும் Control Panel இல் உள்ள Uninstall வசதியை பாவியுங்கள். இல்லாவிட்டால் பிரச்சினை இன்னும் கூடும்.



அதிக programகளை உபயோகிப்பவரானால் RAM ஐ Upgrade செய்யுங்கள்.



இந்த ஆலோசனைகளை பின்பற்றினால் குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிக்க கூடியதாக இருக்கும்.



ஆயினும் இவை எதையும் செய்வதற்கு முன் உங்களது முக்கியமான Fileகளை backup செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

Friday, April 9, 2010

கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள்.


கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள்

அபாயங்கள் நம்மை வரவேற்கின்றனவா? அல்லது நாம் அபாயங்களை வரவேற்கிறோமா! என்ற கேள்வி இந்த தலைப்பைப் படித்தவுடன் நம் மனதில் எழும். கம்ப்யூட்டர் பயன்பாட்டினைப் பொறுத்தவரை இரண்டும் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நம் வாழ்வோடு இரண்டறக் கலந்த கம்ப்யூட்டர் தரும் அபாயங்கள் குறித்து, அறிந்து அதற்கான தற்காப்பு வழிகளை நாம் மேற்கொண்டிருந்தாலும், சில அபாயங்களை நாம் அறியாமலேயே நாம் வரவேற்று மாட்டிக் கொள்கிறோம். கிராமப் புறங்களில் வேலியில் போகும் ஓணான் என்று ஒரு பழமொழி தொடங்கும். அந்த வகையில் தான் நாம் நம்மை அறியாமலேயே கம்ப்யூட்டரில் பல அபாயங்களை வரவழைத்துக் கொள்கிறோம். அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

அடோப் பலவீனங்கள்:
மைக்ரோசாப்ட் புரோகிராம்களுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அடோப் நிறுவன அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது உறுதி. பிளாஷ் (Flash) அக்ரோபட் ரீடர் (Acrobat Reader) அல்லது ஷாக்வேவ் (Shock Wave) என ஏதாவது ஒன்றினை நாம் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கிறோம். கம்ப்யூட்டரைக் கெடுக்கும் மால்வேர் தொகுப்புகளால் இவை எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் பழைய பதிப்புகளை நீங்கள் பயன்படுத்திவந்தால், அவற்றில் உள்ள பலவீனமான இடங்களைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம்கள் நுழைவது எளிது என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புகளில் தான் இந்த பலவீனமான இடங்கள் சரி செய்யப்பட்டு இருக்கும். பழைய பதிப்புகள் எனில் அவை மால்வேர் புரோகிராம்கள் எளிதாக நுழைய இடம் தருவதாக அமையும். இதில் இன்னொரு வகை பிரச்னை என்னவென்றால், இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், உங்கள் அடோப் பிளாஷ் பிளேயர் பழையதாக உள்ளது. அப்டேட் செய்திட இங்கே கிளிக் செய்திடுங்கள் என்று ஒரு செய்தி வரும். கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் முடங்கிப் போய்விடும். (என் சொந்த அனுபவம் இது). அல்லது பிரச்னை இருப்பதாகவும், அது குறித்த விளக்கத்தினையும், தீர்வையும் இந்த பைலில் பார்க்கலாம் என்று ஒரு பி.டி.எப். பைலுக்கான லிங்க் தரப்படும். கிளிக் செய்தால் அவ்வளவுதான். மீண்டும் ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்திடும் அளவிற்குக் கொண்டு செல்லும்.
இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? அடோப் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டு கிடைப்பதாக இருந்தால், அடோப் நிறுவனத்தின் தளம் சென்று அந்த முயற்சியில் ஈடுபடுங்கள். வேறு தளங்கள் தரும், குறிப்பாக பாப் அப் விண்டோக்கள் தரும் லிங்க் மூலம் செல்ல வேண்டாம். அடோப் தளத்தைப் பார்த்து அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.
பயர்பாக்ஸ் ஆட் ஆன்:
பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட் ஆன் தொகுப்பு புரோகிராம்கள் அபாயத்திற்கான அழகான திறவுகோல்களாகும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் ஆக்டிவ் எக்ஸ் ப்ளக் இன் போல மோசமானது இல்லை என்றாலும், ஆபத்தை விளைவிப்பதில் இவையும் சளைத்தவை இல்லை. பல மால்வேர் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் பிரவுசரின் முதன்மை செயல்பாட்டில் சென்று வழி தேடாமல், ஆட் ஆன் தொகுப்புகளைத்தான் பார்த்து நுழைகின்றன.
பிளாஷ் பிளேயர், ஆன்லைன் மியூசிக் பிளேயர் என ஏதாவது ஒன்றுக்கான ஆட் ஆன் என்ற செய்தியுடன் இவை உங்களது கவனத்தை ஈர்க்கும். சரி எனக் கிளிக் செய்தால் மாட்டிக் கொள்வோம்.
இத்தகைய தாக்குதல்களிலிருந்து தப்புவது சிரமம் தான். ஏனென்றால் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை தரும் வசதிகளும் பிரமாதமாய் இருக்கின்றன. முதலில் பயன்படுத்துகையில் இவை எந்த தீங்கும் விளைவிக்காமல் தான் இருக்கின்றன. பின் இவற்றைக் கண்காணித்து மால்வேர் புரோகிராம்கள், இவற்றைப் பயன்படுத்தி நுழைகின்றன.
இவற்றிலிருந்து தப்பிக்க பயர்பாக்ஸ் பிரவுசரை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடாமல், ஏதேனும் பிளாஷ் டிரைவ் மூலம் போர்ட்டபிள் பிரவுசரைப் பயன்படுத்தலாம்.
மேக் சிஸ்டம்:
பலர் இது போன்ற வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகள் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழையாது என்று எண்ணுகின்றனர். இது ஒரு காலத்தில் உண்மையாக இருந்தது. ஏனென்றால் இதனைப் பயன்படுத்துபவர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், வைரஸ்களைப் பரப்புபவர்கள் மேக் பக்கம் கவனத்தைச் செலுத்தவில்லை. இப்போது நிலை மாறிவிட்டது. மேக் சிஸ்டம் வழியாகவும் மால்வேர்கள் பரவத் தொடங்கிவிட்டன. இந்த சிஸ்டத்திலும், பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களை அவ்வப்போது அப்டேட் செய்திட்டால், மால்வேர்கள் நுழைவது தடுக்கப்படலாம்.
ஆப்பிள் சாதனங்கள்:
விண்டோஸ் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் நாம் ஆப்பிள் நிறுவன சாதனங்களைப் (சாப்ட்வேர்கள்) பயன்படுத்தி வருகிறோம் என்பதை மறந்துவிடுகிறோம். இவற்றையும் மற்ற அப்ளிகேஷன்கள் போலவே நாம் கண்காணிக்க வேண்டும். பல கம்ப்யூட்டர்களில் குயிக் டைம் மற்றும் ஐ ட்யூன்ஸ் ஆகிய ஆப்பிள் நிறுவன சாப்ட்வேர்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் குயிக் டைம் சாப்ட்வேர் தொகுப்பைப் பயன்படுத்தி பல வைரஸ்கள் பரவியது நிரூபிக்கப்பட்டுள்ளது. 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இது அதிகம் இருந்தது. இதனை உணர்ந்த ஆப்பிள் நிறுவனம் அவ்வப்போது இதற்கான தடுப்பு அப்டேட் பைல்களைத் தானாகவே அனுப்பி சரி செய்தது.எனவே அப்டேட் செய்வதுதான் இங்கும் பாதுகாப்பு வழியாகும்.
குழப்பும் யு.ஆர்.எல்.கள்:
மிகப் பெரிய நீளமான இணைய தள முகவரிகளைச் சுருக்கி தரும் லிங்க்குகள் வழியாக மால்வேர்கள் நுழைவது தற்சமயம் அதிகரித்து வருகிறது. சுருக்கமாகத் தரப்பட்டுள்ள யு.ஆர்.எல். முகவரிகள், எதனைக் குறிக்கின்றன என்று அறியாமலேயே, நாம் அவற்றின் மீது கிளிக் செய்து மாட்டிக் கொள்கிறோம். இதிலிருந்து தப்பிக்க ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி இந்த தளத்தில் நாம் எந்த ஒரு சுருக்கப்பட்ட இணைய முகவரியையும் தந்து, அது தீங்கு விளைவிக்கக் கூடியதா என அறிந்து கொள்ளலாம்.
டி.என்.எஸ். ஹைஜாக்:
எண்களில் அமைந்துள்ள முகவரிகளை, நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் சொற்களில் அமைக்கும் பணியினை டி.என்.எஸ். சர்வர்கள் மேற்கொள்கின்றன. இந்த மாற்றத்தில் ஈடுபடுகையில் ஏதேனும் ஒரு மால்வேர் புரோகிராம், டி.என்.எஸ். சர்வர் தர இருப்பதனை ஹைஜாக் செய்து, தன்னுடைய மோசமான லிங்க்கைத் தரும் வேலை தற்போது நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்ப நாம் எந்த முயற்சியும் எடுக்க முடியாது. டி.என்.எஸ். சர்வர்களை இயக்குபவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும்.
மேலே சொன்னவை நாம் பயன்படுத்தியே ஆக வேண்டிய கம்ப்யூட்டர் சாதனங்கள் தரும் தீய விளைவுகளாகும். இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. எனவே கூடுதல் கண்காணிப்பும், மேலே பரிந்துரைக்கும் வழிகளுமே பாதுகாக்கும் கவசங்களாக இருக்கும்

Friday, January 29, 2010

சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு?








 

நீங்கள் பார்க்க (விளையாட) போகும் இந்த விளையாட்டு ஏற்கனவே பலர் விளையாடி இருப்பீர்கள், இது தெரியாதவர்களுக்காக. இதில் உள்ள சுவாராசியம் கொஞ்ச நாள் சென்றால் இந்த விளையாட்டு மறந்து விடும், எனவே நீங்கள் ஏற்கனவே விளையாடி இருந்தாலும் உங்களுக்கான சவால் தான்... என்ன கொஞ்சம் விரைவில் கண்டு பிடித்து விடுவீர்கள்! அவ்வளவே! :-)

இந்த விளையாட்டு என்னவென்றால் இந்த கரையில் உள்ளவர்கள் அனைவரும் மறு கரைக்கு செல்ல வேண்டும்!


சரி விளையாட்டிற்கான விதிமுறையை பார்ப்போம் 

இந்த படகில் இருவர் மட்டுமே செல்ல முடியும்

அம்மா, அப்பாவின் துணை இல்லாமல் மகன்களுடன் இருக்க முடியாது (Mother can't stay with son(s) without father presence)

அதே போல அப்பா, அம்மாவின் துணை இல்லாமல் மகள்களுடன் இருக்க முடியாது (Father can't stay with daughter(s) without mother presence)

திருடன் (வரி போட்ட சட்டை) காவலர் உடன் அல்லது தனியாக மட்டுமே இருக்க முடியும்

அம்மா அப்பா காவலர் மட்டும் இந்த படகை ஓட்ட முடியும், குழந்தைகள், திருடன் தனியாக போக ஓட்ட முடியாது

ஆளில்லாமல் தனியாக படகை ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு வர வைக்க முடியாது

படகில் யாரையாவது ஏற்ற இறக்க வேண்டும் என்றால் அவர்களை க்ளிக்க வேண்டும்

படகை மறுகரைக்கு ஓட்ட வேண்டும் என்றால் சிகப்பு நிற குமிழை க்ளிக்க வேண்டும்

முக்கியமான விஷயம் இந்த விளையாட்டில் எந்த ஒரு ஏமாற்று வேலையும் கிடையாது, முழுமையாக உங்கள் திறமையே!

பார்க்கலாம் நீங்கள் எத்தனை நிமிடத்தில் அனைவரையும் மறு கரைக்கு கொண்டு செல்கிறீர்கள் என்று! ;-) முதன் முதலில் நான் ஐந்து வருடம் முன்பு விளையாடினேன் (அப்போது விதிமுறைகள் எதுவும் தெரியாது, நானே விளையாடி தெரிந்து கொண்டேன்) அதன் பிறகு இப்போது தான் விளையாடினேன். முன்பு எவ்வளவு நிமிடத்தில் முடித்தேன் என்று நினைவில்லை, தற்போது 14 நிமிடத்தில் முடித்தேன்.

விளையாட இங்கே சொடுக்கவும்  (விளையாட்டை துவங்க நீல நிற வட்ட வடிவ பொத்தானை அழுத்தவும்)
நன்றி கிரி

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா?
கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.


1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.
அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.
ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.
இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.
ஈ. 'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.
உ. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.

2. உங்கள் கணிணித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.

3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.

4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.

5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.

6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம்.

7. CCleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் 'Registry' யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.

8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.

9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்

10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.

11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.

12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.

13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.

14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை 'Reformat' செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.

15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள்.

16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி......ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.

p.suthan

Monday, January 25, 2010

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே....

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம்

என் வாழ்வில் வருமா

மழை கிளியே மழை கிளியே

உன் கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே

நான் என்னை கண்டேனே சென்றேனே .



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம்

என் வாழ்வில் வருமா

மழை கிளியே மழை கிளியே

உன் கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே

நான் என்னை கண்டேனே சென்றேனே



கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்

துளியாய் துளியாய் குறையும்

மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே

தானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே

இந்த காதல் வந்துவிட்டால்

நம் தேகம் மிதந்திடுமே

விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே

ஒ ..ஒ ..ஒ ..



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம்

என் வாழ்வில் வருமா

மழை கிளியே மழை கிளியே

உன் கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே

நான் என்னை கண்டேனே சென்றேனே



ஆசை என்னும் தூண்டில் முள் தான்

மீனை நெஞ்சை இழுக்கும்

மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட

மனம் துடிக்கும்

சுற்றும் பூமி என்னை விட்டு

தனியாய் சுற்றி பறக்கும்

நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ

புது மயக்கம்

இது மாய வலை அல்லவா

புது மோக நிலை அல்லவா

உடை மாறும் நடை மாறும்

ஒரு பாரம் என்னை பிடிக்கும்



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம்

என் வாழ்வில் வருமா?

Tuesday, January 19, 2010

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!
ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....




1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..



2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)


3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...




4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)





5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.




6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)


8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.