Thursday, July 8, 2010

காதல்., காதல்., காதல்...!!


வணக்கம் சொல்லி



சந்திக்கையிலும்..,






வருகிறேன் என


விடைபெறுகையிலும்..,






இயல்பாய் பேசி


விலகுகிறாய் நீ..






இயக்கமே தடைப்பட்டு


நிற்கிறேன் நான்..

.....................................................................................................

" நீதான் " என்று சொல்ல



உனக்கு தைரியம் இல்லை..






" நானா..? " என்று கேட்க


எனக்கும் தெம்பில்லை..






உன் கவிதைப் பெண் யாரடா..??!!






------------------------------------



இருபது நிமிடம்


தாமதமாய் வந்த


என்னை


திட்டுகிறாய் நீ..,






இருபத்தியொரு வருடம்


தாமதமாய் வந்த


உன்னை


எதுவுமே சொல்லாமல்


அனுசரித்துக் கொள்கிறது


என் காதல்..!



------------------------------------






நீ கேட்டுக் கொண்டதால்


இந்த கவிதையைக் கூட


அழகாகவே எழுத


ஆசைப்படுகிறேன்..






ஆனாலும்


எழுதப்போவதில்லை..






காதலை விடவும்


அழகான ஒன்று


நமக்கெதற்கு..??!!



------------------------------------






பிரிந்து போன நாளில்


எல்லோரும் கொடுத்தார்கள்


நினைவு பரிசு..






நீ மட்டும் கொடுத்தாய்


உன் நினைவுகளை பரிசாக..






------------------------------------



விக்கலில் நான்


தண்ணீர் குடிப்பதில்லை..,


நினைப்பது நீயாக


இருந்தால் நீடிக்கட்டுமே..!!






------------------------------------
( படித்ததில் பிடித்தது...)



பின் குறிப்பு : உங்களுக்கு பிடிச்ச


காதல் கவிதைகளையும்

Comment Section-ல எழுதலாமே...!!