Friday, January 29, 2010

சவாலே சமாளி! இதை முடிக்க உங்களுக்கு ஆகும் நேரம் எவ்வளவு?








 

நீங்கள் பார்க்க (விளையாட) போகும் இந்த விளையாட்டு ஏற்கனவே பலர் விளையாடி இருப்பீர்கள், இது தெரியாதவர்களுக்காக. இதில் உள்ள சுவாராசியம் கொஞ்ச நாள் சென்றால் இந்த விளையாட்டு மறந்து விடும், எனவே நீங்கள் ஏற்கனவே விளையாடி இருந்தாலும் உங்களுக்கான சவால் தான்... என்ன கொஞ்சம் விரைவில் கண்டு பிடித்து விடுவீர்கள்! அவ்வளவே! :-)

இந்த விளையாட்டு என்னவென்றால் இந்த கரையில் உள்ளவர்கள் அனைவரும் மறு கரைக்கு செல்ல வேண்டும்!


சரி விளையாட்டிற்கான விதிமுறையை பார்ப்போம் 

இந்த படகில் இருவர் மட்டுமே செல்ல முடியும்

அம்மா, அப்பாவின் துணை இல்லாமல் மகன்களுடன் இருக்க முடியாது (Mother can't stay with son(s) without father presence)

அதே போல அப்பா, அம்மாவின் துணை இல்லாமல் மகள்களுடன் இருக்க முடியாது (Father can't stay with daughter(s) without mother presence)

திருடன் (வரி போட்ட சட்டை) காவலர் உடன் அல்லது தனியாக மட்டுமே இருக்க முடியும்

அம்மா அப்பா காவலர் மட்டும் இந்த படகை ஓட்ட முடியும், குழந்தைகள், திருடன் தனியாக போக ஓட்ட முடியாது

ஆளில்லாமல் தனியாக படகை ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு வர வைக்க முடியாது

படகில் யாரையாவது ஏற்ற இறக்க வேண்டும் என்றால் அவர்களை க்ளிக்க வேண்டும்

படகை மறுகரைக்கு ஓட்ட வேண்டும் என்றால் சிகப்பு நிற குமிழை க்ளிக்க வேண்டும்

முக்கியமான விஷயம் இந்த விளையாட்டில் எந்த ஒரு ஏமாற்று வேலையும் கிடையாது, முழுமையாக உங்கள் திறமையே!

பார்க்கலாம் நீங்கள் எத்தனை நிமிடத்தில் அனைவரையும் மறு கரைக்கு கொண்டு செல்கிறீர்கள் என்று! ;-) முதன் முதலில் நான் ஐந்து வருடம் முன்பு விளையாடினேன் (அப்போது விதிமுறைகள் எதுவும் தெரியாது, நானே விளையாடி தெரிந்து கொண்டேன்) அதன் பிறகு இப்போது தான் விளையாடினேன். முன்பு எவ்வளவு நிமிடத்தில் முடித்தேன் என்று நினைவில்லை, தற்போது 14 நிமிடத்தில் முடித்தேன்.

விளையாட இங்கே சொடுக்கவும்  (விளையாட்டை துவங்க நீல நிற வட்ட வடிவ பொத்தானை அழுத்தவும்)
நன்றி கிரி

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா?
கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.


1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.
அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.
ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.
இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'சி டி' 'டிவிடி'க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும்.
ஈ. 'ஸ்டார்ட்' ஐச் சொடுக்கவும். 'ரன்' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%Temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.
உ. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recyecle Binல் கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Binஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Binஇல் இருக்குமானால் உங்கள் சி டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.

2. உங்கள் கணிணித் திரையில் 'WallPaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.

3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் சிறிதாக்கி (Minimize) வைக்கவும்.

4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவிர்க்கலாம்.

5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும்(Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் C:\Windows சென்று Fonts ஃபோல்டரைத்திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள். (எ.கா. Windings). உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.

6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை Defragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி வட்டியக்கியில் (டிஸ்க் ட்ரைவ்) உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் Defragmentation செய்வது மிகவும் அவசியம்.

7. CCleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் 'Registry' யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.

8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.

9. தேவையற்ற பயன்படாத Portகளை முடக்கிவையுங்கள்

10. உங்கள் Hard Disk ஐ, பிரித்து 'சி' 'டி', 'இ' எனத்தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.

11. அடிக்கடி உங்கள் கணிணியின் தட்டச்சுப் பலகை, கணிணி எலி, கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.

12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான/அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள், கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.

13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை நிரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன்மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.

14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை 'Reformat' செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.

15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள்.

16. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி......ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.

p.suthan

Monday, January 25, 2010

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே....

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம்

என் வாழ்வில் வருமா

மழை கிளியே மழை கிளியே

உன் கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே

நான் என்னை கண்டேனே சென்றேனே .



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம்

என் வாழ்வில் வருமா

மழை கிளியே மழை கிளியே

உன் கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே

நான் என்னை கண்டேனே சென்றேனே



கடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும்

துளியாய் துளியாய் குறையும்

மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே

தானா எந்தன் கால் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்

தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே

இந்த காதல் வந்துவிட்டால்

நம் தேகம் மிதந்திடுமே

விண்ணோடும் முகிலோடும் திரிந்திடுமே

ஒ ..ஒ ..ஒ ..



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம்

என் வாழ்வில் வருமா

மழை கிளியே மழை கிளியே

உன் கண்ணை கண்டேனே

விழி வழியே விழி வழியே

நான் என்னை கண்டேனே சென்றேனே



ஆசை என்னும் தூண்டில் முள் தான்

மீனை நெஞ்சை இழுக்கும்

மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட

மனம் துடிக்கும்

சுற்றும் பூமி என்னை விட்டு

தனியாய் சுற்றி பறக்கும்

நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ

புது மயக்கம்

இது மாய வலை அல்லவா

புது மோக நிலை அல்லவா

உடை மாறும் நடை மாறும்

ஒரு பாரம் என்னை பிடிக்கும்



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய்

முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய்

பெண்ணே பெண்ணே

அடி இது போல் மழை காலம்

என் வாழ்வில் வருமா?

Tuesday, January 19, 2010

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!

காதலில் விழுந்தவர்களுக்கு & விழப்போகிறவர்களுக்கு!!
ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. (குறிப்பாக காதலர்களுக்கிடையில்) இந்தப் பிரச்சினை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....




1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மோர்னிங்'ன்னு ஒரு சின்ன SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபா செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விடயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..



2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வைச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட்)


3. அவங்க பெயரோட முதல் எழுத்தை பைக் கீ-செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...




4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலொக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)





5. அவங்க பெயர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வைச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கோல் பண்ண சொல்லுங்க. அந்தப் பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.




6. கவிதைங்கிற பெயர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)


8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஓடர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஓடர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், "இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வைச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விடயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சினைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விடயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வைச்சு கொண்டாடுவாங்க.