Friday, November 19, 2010

ஏன் ?????????????????

நிலவை பிரிந்து வானம் விழவில்லை;


நதியை பிரிந்து கரையும் அழவில்லை;


உன்னை பிரிந்த நான் மட்டும் ஏன்?



வண்டுக்கு மலரில் இல்லாத மோகம்;


வேருக்கு நீரில் இல்லாத தாகம்;


எனக்கு மட்டும் உன்னில் ஏன்?





அனலாய் சுட்ட உன் வார்த்தைகளை


ஏன் இதயம்


சிதறாமல் சேகரிப்பது ஏன்?



தணலாய் கொதிக்கும்


உன் கோபத்தை


எட்டியிருந்து ரசிப்பதும் ஏன்?





விட்டுக்கொடுக்கவும் முடியாமல்


விட்டுப்போகவும் இயலாமல் - நெஞ்சம்


தட்டுத் தடுமாறி தவிப்பது ஏன்?



எட்டிப்பிடிக்கவும் முடியாத உன்னை


கட்டிப்பிடிக்க நினைத்து - நானும்


பெட்டிப் பாம்பாய் அடங்குவது ஏன்?




சுக்கு நூறாய் உடைந்த பின்னும்


சட்டென்று ஒட்டிக்கொண்டு


உனக்காய் உருகும் உயிரும் ஏன்?



வேண்டும் என்று இதயம் முனுமுனுக்க


வேண்டாம் என்று போலியாய்


அடிக்கடி உளறும் உதடுகள் ஏன்?

No comments:

Post a Comment