Thursday, August 30, 2012

படித்ததில் பிடித்தவை...

ஒரு நாள் ஒரு வயது முதிர்ந்த துறவியும், அவரது சிஷ்யனும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு போய் கொண்டிருந்தார்கள். போகும் வழியில் அடுத்த கரைய தாண்ட ஒரு உடைந்த பாலம் இருந்தது...














"சரி வா போகலாம்.." இது குரு. "அங்க பாருங்க குருவே! யாரோ நடுவுல இருக்குற மாரி இருக்கே?" இது சிஷ்யன். குருவும் சிஷ்யன் கூறிய பக்கத்தை உற்று நோக்கினர். அப்பொழுது ஒரு அழகான பெண் அந்த பாலத்தின் நடுவில் இருந்த உடைசல்களில் மாட்டிக்கொண்டு போக முடியாமல் தவிப்பது அவர் பார்வையில் பட்டது.







உடனே குரு அந்த இடத்துக்கு சென்று அந்த பெண்ணையும் தூக்கிக்கொண்டு தானும் பாலத்தை கடந்தார். இதை பார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனுக்கு ஒரே ஆச்சரியம், எங்கள் துறவற வாழ்க்கையில் பெண்களை சந்திப்பது, அவர்களை பார்ப்பது, அவர்களுடன் உரையாடுவது எல்லாம் ஒதுக்கி வைக்கப்பட்ட பாவ செயல்களாகும், இவரோ அந்த பெண்ணை தொட்டு தூக்கி இருக்கிறாரே என சிந்தித்தான். அந்த குருவோ பாலத்தை கடந்ததும் அந்த பெண்ணை கீழே இறக்கி வைத்தவுடன், அந்த பெண் அவருக்கு நன்றி கூறி விடை பெற்றார்.







அதன் பின் குருவும் சிஷ்யனும் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். சிஷ்யனுக்கோ குரு செய்தது மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே சிஷ்யன் குருவிடம் கேட்டே விட்டான். "நீங்க செய்தது சரியில்ல, எனக்கு பிடிக்கவே இல்ல, ஒரு பெண்ணை தொட்டு தூக்கியது பிழை" என்றான். இதற்கு குருவோ எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் "நான் அந்த பெண்ணை பாலத்திற்கு கிட்டே கீழே இறக்கி விட்டுட்டேன், நீ இவ்ளோ தூரம் தூக்கிகிட்டு வந்தியா?? என்று ஆச்சர்யத்தோடு கேட்டார்..







நீதி : எமது வாழ்கையில் எதிர்பாராத/ ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. ஆனால் நாமும் எமது வாழ்விலே அந்த குருவைப்போல அனைத்தையும் தாண்டி செல்கின்றோமா??? அல்லது அந்த சிஷ்யனைப்போல அவற்றை கடந்து போக விடாது பிடித்துக்கொண்டு எமது சந்தோஷத்தையும் கெடுத்துக்கொண்டு பிறர் நிம்மதியையும் கெடுக்கின்றோமா???

Wednesday, August 29, 2012

நான் நலமாக உள்ளேன்! என் மனசு மட்டும் தான் உள்ளே இறந்து கொண்டிருக்கிறது!

எதிர் பார்ப்புகள் அற்ற வாழ்க்கையில் ஏமாற்றங்கள் இருப்பதில்லை ஏமாற்றங்களே வாழ்க்கை ஆனா பின் அங்கு எதிர் பார்ப்புகளுக்கு இடம் இல்லை..


உண்மையாக நேசிப்பவர்கள் அவமான படுவார்களே ஒழிய எவரையும் அவமான படுத்த மாட்டார்கள் ♥ ♥ ♥


நான் சிரித்த நிமிடங்கள் பொய்யாக இருக்கலாம், ஆனால் அழுத நிமிடங்கள் நிஜமானவை...!



மற்றவரை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோவர்கள் என்பதற்கு சரியான உதாரணம் ERASER #


நட்பு என்பது ரோட்ல கிடைக்கிற ரூபா நோட்டு மாதிரி தொலச்சவன் கவலை படுவான். கிடைச்சவன் என்ஜாய் பண்ணுவான்.so don't miss yours Friends
 
  Life was much easier when ''Apple'' and ''BLACKBERRY'' were just fruits.    

Sunday, June 10, 2012

படித்ததில் பிடித்தது.

உங்களால் பறக்க முடியாவிட்டால் ஓடுங்கள். ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள். இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது-




நிறுத்த சொல்கிறாய் நிறுத்திக்கொள்கிறேன் உன்மீது கொண்ட காதலை அல்ல உனக்காக துடிக்கும் என் இதயத்தின் துடிப்பை............



பிரிந்து இருந்து பிரியம் கட்ட வேண்டாம் ".......!

"நீ அருகில் இருந்து சண்டை போடு , போதும் ",

அது தான் காதலின் ஆழம்



சரியான நேரங்களை தவறவிட்டால், தவறான நேரங்களில் சரியவேண்டி வரும்.



பேசவேண்டிய நேரங்களில் அமைதியாக இருந்துவிட்டால், அமைதியான நேரங்களில் நிம்மதியாக இருக்கமுடியாது!!!!!



கடந்த வருடங்களில், நடந்த வருடங்களை விட தவழ்ந்த வருடங்களே இனிமையானது!



ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க்-விஜய்# அப்போ நீங்கதானே அந்த டைனோசர்.



அழிவேன் என்று தெரிந்தும், உருகிட விரும்பினேன் உன் காதல் வெப்பத்தில்



வலியை வலியாய் அனுபவித்து வலியை கொள் (ல் )கிறேன் ...

வலியில் வழி தேடுகின்றேன்



உதடுகளின் பிரிவை கூட அவனால் தாங்க

முடியவில்லை அதனால் என்னவோ ..............

என்னை பார்க்கும் போதெல்லாம் மௌனம் ஆகி

விடுகிறான் .............



வேடிக்கை பார்க்கும் உனக்கோ

என் வேதனை புரிவதில்லை

வேதனைப்படும் எனக்கோ

வேடிக்கை பார்க்க தெரிய வில்லை !!

 

Friday, November 19, 2010

ஏன் ?????????????????

நிலவை பிரிந்து வானம் விழவில்லை;


நதியை பிரிந்து கரையும் அழவில்லை;


உன்னை பிரிந்த நான் மட்டும் ஏன்?



வண்டுக்கு மலரில் இல்லாத மோகம்;


வேருக்கு நீரில் இல்லாத தாகம்;


எனக்கு மட்டும் உன்னில் ஏன்?





அனலாய் சுட்ட உன் வார்த்தைகளை


ஏன் இதயம்


சிதறாமல் சேகரிப்பது ஏன்?



தணலாய் கொதிக்கும்


உன் கோபத்தை


எட்டியிருந்து ரசிப்பதும் ஏன்?





விட்டுக்கொடுக்கவும் முடியாமல்


விட்டுப்போகவும் இயலாமல் - நெஞ்சம்


தட்டுத் தடுமாறி தவிப்பது ஏன்?



எட்டிப்பிடிக்கவும் முடியாத உன்னை


கட்டிப்பிடிக்க நினைத்து - நானும்


பெட்டிப் பாம்பாய் அடங்குவது ஏன்?




சுக்கு நூறாய் உடைந்த பின்னும்


சட்டென்று ஒட்டிக்கொண்டு


உனக்காய் உருகும் உயிரும் ஏன்?



வேண்டும் என்று இதயம் முனுமுனுக்க


வேண்டாம் என்று போலியாய்


அடிக்கடி உளறும் உதடுகள் ஏன்?

Tuesday, November 9, 2010

ME and MY BOSS .......?????????????

When I Take a long time to finish,


  I am slow,


When my boss takes a long time,


he is thorough.




When I don't do it,


I am lazy,


When my boss does not do it,


he is busy,



When I do something without being told,


I am trying to be smart,


When my boss does the same,


he takes the initiative,




When I please my boss,


I am apple polishing,


When my boss pleases his boss,


He is cooperating,


When I make a mistake,


I' am an idiot.


When my boss makes a mistake,


He's only human.





When I am out of the office,


I am wondering around.


When my boss is out of the office,


He's on business.







When I am on a day off sick,


I am always sick.


When my boss is a day off sick,


He must be very ill.





When I apply for leave,


I must be going for an interview .


When my boss applies for leave,


it's because he's overworked







When I do good,


my boss never remembers,


When I do wrong,


he never forgets




What to do?????????????





What to do?????????????




Thursday, August 5, 2010

ஆண்கள் எல்லாம் சிங்கம் மாதிரி...

எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை தமிழ் படுத்தி தந்திருக்கிறேன். கண்டிப்பாக சிரிக்க மட்டும்...








ஆண்களே!!! நீங்கள் ஒரு சிங்கம் மாதிரி..................................


நீங்கள் இந்த உலகத்தை ஆளப்பிறந்தவர்கள்


இந்த உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்தவர்கள்....


பார்வையாலேயே மிரட்டும் வித்தை அறிந்தவர்கள்....





எதையும் செய்யும் சுதந்திரம் மிக்கவர்கள்....





யாராக இருந்தாலும் உங்களுக்கு கீழேதான்...


அனைவரும் விரும்பும் பாசக்கார மனிதர்....





எப்போதும் ஜென்டில்மேன் நீங்கள்...





நினைத்ததை முடிக்கும் வல்லமை படைத்தவர்....



உங்களுக்கு கோபம் வந்தால் நாடு தாங்காது...





மொத்தத்தில் உங்களை கண்டால் நாடே அதிரும்...



என்னதான் நாட்டையே நடுங்க வைக்கும் சிங்கமாக இருந்தாலும்,

:

:

:

:

:

:

:

:

:



உங்கள் வீட்டை பொறுத்தவரை நீங்கள் ஒரு காமெடி பீஸ்தான். ஆண்டவன் உங்களுக்கும் ஒரு ஆப்பு வைத்திருக்கிறான்.
 

நன்றி பாலாவின் பக்கங்கள்

Thursday, July 8, 2010

காதல்., காதல்., காதல்...!!


வணக்கம் சொல்லி



சந்திக்கையிலும்..,






வருகிறேன் என


விடைபெறுகையிலும்..,






இயல்பாய் பேசி


விலகுகிறாய் நீ..






இயக்கமே தடைப்பட்டு


நிற்கிறேன் நான்..

.....................................................................................................

" நீதான் " என்று சொல்ல



உனக்கு தைரியம் இல்லை..






" நானா..? " என்று கேட்க


எனக்கும் தெம்பில்லை..






உன் கவிதைப் பெண் யாரடா..??!!






------------------------------------



இருபது நிமிடம்


தாமதமாய் வந்த


என்னை


திட்டுகிறாய் நீ..,






இருபத்தியொரு வருடம்


தாமதமாய் வந்த


உன்னை


எதுவுமே சொல்லாமல்


அனுசரித்துக் கொள்கிறது


என் காதல்..!



------------------------------------






நீ கேட்டுக் கொண்டதால்


இந்த கவிதையைக் கூட


அழகாகவே எழுத


ஆசைப்படுகிறேன்..






ஆனாலும்


எழுதப்போவதில்லை..






காதலை விடவும்


அழகான ஒன்று


நமக்கெதற்கு..??!!



------------------------------------






பிரிந்து போன நாளில்


எல்லோரும் கொடுத்தார்கள்


நினைவு பரிசு..






நீ மட்டும் கொடுத்தாய்


உன் நினைவுகளை பரிசாக..






------------------------------------



விக்கலில் நான்


தண்ணீர் குடிப்பதில்லை..,


நினைப்பது நீயாக


இருந்தால் நீடிக்கட்டுமே..!!






------------------------------------
( படித்ததில் பிடித்தது...)



பின் குறிப்பு : உங்களுக்கு பிடிச்ச


காதல் கவிதைகளையும்

Comment Section-ல எழுதலாமே...!!